Tuesday, June 30, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
குழந்தைகள் எது செய்தால் அதை நாள் முழுவதும் ரசித்து கொண்டே இருக்கலாம். இங்கு ஒரு சுட்டி குழந்தை துறு துறு வென இருக்கிறது. அங்கும் இங்கும் ஓடித்திரிகின்றது. இந்த காட்சியை பார்த்தால் கவலை எல்லாம் எம்மை விட்டு ஓடிடுவிடும். இறுதிவரை பார்த்து குழந்தையுடன், குழந்தையாக மாறி மகிழுங்கள். குறித்த காட்சியை மில்லின் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
ஜோர்தானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர்கள் மீது அந்நாட்டு பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன், தொழிலாளர்களுக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து கண்ணீர்ப்புகை குண்டு வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்கள் தங்களை சொந்த நாட்டிற்கு மீள அனுப்புமாறு கோரியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாங்கள் வேலையில்லாமல் இருந்துள்ளதாகவும், தொடர்ந்து நான்கு...
இந்தியாவில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து அவர்களின் உள்ளாடைகளை கிழித்து விட்டு செல்லும் செயலை ஒருவருடமாக செய்து வந்த நபர் ஒருவழியாக பொலிசில் சிக்கியுள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோரில் உள்ள பெண்கள் விடுதிகள், பெண்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மர்ம நபர் இரவில் நுழைவதாக பொலிசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. இதையடுத்து பொலிசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பெண்கள் விடுதிக்குள் நபர் ஒருவர்...
சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துப்பாக்கி மற்றும் நவீன ஆயுதளங்களோடு நுழைந்த ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்த மக்களை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலின் போது 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 60 பேர் காயமடைந்தனர் என்று ஐக்கிய நாடுகள் சபை நேற்று தெரிவித்துள்ளது. இதில் அங்கு இயங்கி வந்த சந்தையை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சூறையாடியதோடு, வீடுகளையும் எரித்துள்ளனர். மக்களை பாதுகாப்பதற்கு அரசு பாதுகாப்பு படைகளை அனுப்பும்...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியிட பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். பயணம் நன்மை தரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில்...
பிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளார். இலங்கையரான Ino Ratnasingam என்ற 17 வயது இளைஞரே, வெறும் 17 மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார். இதே ஆதரவு தமக்கு தொடர்ந்து கிடைத்துவரும் எனில் தம்மால் ஒரு நாள் மில்லியனர் ஆக முடியும் என்ற நம்பிக்கையையும் Ino Ratnasingam வெளிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வழக்கமாக விற்கப்படாத...
மேற்கு ஜேர்மனியில் வீடு ஒன்றின் மீது சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அந்த வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. அந்த வீட்டில், பெண் ஒருவரும் அவரது இரண்டு வயது குழந்தையும் வாழ்ந்து வந்துள்ளனர். விமானம் விழுந்து வீடு தீப்பிடித்து எரிந்ததில், அந்த இளம் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். சிறு காயங்களுடன் தப்பிய அந்த குழந்தை, தாயை இழந்து ஆதரவின்றி தவிக்கிறது. இதற்கிடையில், அந்த விமானத்தில் பயணித்த இரண்டு பேரும் கூட...
வியட்நாம் நகரமொன்றில் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, 80,000 பேரை அதிரடியாக வெளியேற்ற முடிவுசெய்துள்ளது அந்நாடு. வியட்நாமின் Da Nang நகரில் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்படதைத் தொடர்ந்து, அந்நகரத்திலிருந்து 80,000 பேர் வெளியேற்றப்படுகின்றனர். வியட்நாமில் சமூக பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது. நாட்டின் எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில், குறைவான விலையில் விமான டிக்கெட்கள், ஹொட்டல்களில் தங்கும் வசதி ஆகியவை கிடைப்பதால், உள்ளூர்...
கனடாவில் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அவர் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் சாரா பூர்ட் (38). இவர் கடந்த 10ஆம் திகதி Fort St. John பகுதியில் இருந்து காணாமல் போனார். சாராவை பொலிசார் தேடி வந்த நிலையில் அவர் காணாமல் போன இடத்திலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனிமையான பகுதியில் சடலமாக சமீபத்தில் மீட்கப்பட்டார். இந்த நிலையில்...
சீனாவின் வூகான் மாகாணத்தில் உணவகத்தில் வாங்கிய சூப்பில் இறந்து கிடந்த வௌவாலைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்தை சேர்ந்தவர் சென். அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிரூட்டப்பட்ட பன்றி சூப்பை வாங்கிவந்துள்ளார். முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் அதனை சாப்பிட்டுள்ளார். மூன்றாவது நாள் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து அந்த சூப்பை சாப்பிட...