Saturday, June 27, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொலை செய்த இளம்தாய் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி எல்.இ.பி. தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (27). இவர் மகளிர் சுயஉதவி குழுவில் தவணை தொகை வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவரும் காட்டுமன்னார்கோவில் அருகே ஆட்கொண்டநத்தம் கிராமத்தை சேர்ந்த பிரியங்கா(22) என்பவரும் காதலித்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு...
தமிழகத்தில் வயதான தம்பதியினர், இறப்பிலும் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லர்அருள்சாமி (75). மீன் வியாபாரியான இவருக்கு பாக்கியவதி(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பத்தில் அந்த கிராமத்தில், மன்னன் தெருவில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சாமுவேல், மார்ட்டின் என இரண்டு மகன்களும் பத்மாவதி என்ற மகளும் என மொத்தம் மூன்று...
மாத்தளை - கொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் உயிரிழந்துள்ளது. குழந்தை சிகிச்சைக்காக தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் உரிய சிகிச்சை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என தெரிவித்து குழந்தையின் உறவினர்கள் வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் அதன் சொத்துக்களை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் சொத்துக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு...
இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலை போன்று St Paul’s Cathedral தேவாலயத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்ட தற்கொலைதாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபியா ஷேக் என்ற தற்கொலைதாரியே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார். இவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட முதல் பெண் தற்கொலை குண்டுதாரி என அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. இவருக்கு தற்போது...
மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக, பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை நெரிப்பதாக பிரித்தானியா குற்றம் சாட்டிய சில மணி நேரத்திற்குள், லண்டனிலுள்ள சீன தூதரகம், ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு பிரித்தானியா விடுத்துள்ள அழைப்பு சர்வதேச விதிமுறைகளை மீறும் செயல் என குறிப்பிட்டதோடு, இந்த நடவடிக்கையை உறுதியாக எதிர்ப்பதாகவும், தக்க பதில்...
லண்டனில் இரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் கொள்ளையடித்து அவரை கடத்த நபர் ஒருவர் முயன்ற நிலையில் அப்பெண் அவரிடம் இருந்து சாதுர்யமாக தப்பித்துள்ளார். London’s Waterloo இரயில் நிலையத்தில் புதன்கிழமை பகல் 2.30 மணிக்கு இளம்பெண்ணொருவர் நின்றிருந்தார். அப்போது அவர் அருகில் வந்த நபர் தனக்கு ஒரு உதவி வேண்டும் என கூறி தொந்தரவு செய்தான், இதையடுத்து அப்பெண் அங்கிருந்து வேகமாக சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற அந்த ஆண் டிக்கெட் வாங்கும்...
மோசமான வகையில் போட்டோஷாப் செய்யப்பட்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மனைவியின் புகைப்படங்களை பலூனில் கட்டி பறக்கவிட்டு வடகொரியா மீதான தன் பகையை வெளிக்காட்டிக்கொண்டுள்ளது தென்கொரியா. தென்கொரியாவின் இந்த கீழ்த்தரமான செயலுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் கிம். வட, தென் கொரிய அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக அலுவலகம் ஒன்றை எல்லைக்கருகில் வட கொரியாவில் கட்டியிருந்தார் கிம். இரு நாடுகளுக்கும் இடையில் உரசல் இருந்துகொண்டே இருந்த நிலையில், அந்த...
சீனா உலகம் முழுக்க பல நாடுகளிடம் இராணுவ ரீதியாக அத்துமீறுவது போலவே இந்தியாவுடனும் அத்துமீறி வருகிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. இந்தியா சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் எல்லாம் கவனிக்க தொடங்கி உள்ளது. லடாக்கில் சீனா செய்யும் அத்துமீறலை அமெரிக்கா கவனித்து வருகிறது. இதில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என்று அமெரிக்கா ஏற்கனவே கூறிவிட்டது. அதேபோல் இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்றும் அமெரிக்கா வெளிப்படையாக கூறியுள்ளது. இந்த...
மெக்சிகோ நாட்டில் இறந்தவர்கள் உடல்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா நோய் தொற்று உலக நாடுகளை மிக தீவிரமாக பாதித்து வருகிறது. தினசரி அடிப்படையில் கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் ஒருபக்கம் இருக்க, உயிரிழந்தோர் எண்ணிக்கை பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்று மெக்சிகோ நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தோர் உடல்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில்...
ஜூலியை யாராவது மறக்க முடியுமா என்ன? ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் என பலரின் கவனத்தை ஈர்த்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்தே அவர் மீதான் விமர்சனங்களும், கேலி கிண்டல்களும் தொடர்ந்து வருகின்றன. ஆனாலும் அவர் அதை பொறுமையாக எதிர்கொண்டு வருகிறார். அவரை வாழ்த்துவோரும் இருக்கிறார்கள். ஜூலி விளம்பரங்கள், படங்கள் என நடித்து வருகின்றார். மாப்பிள்ளை சிங்கம், நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஜூலியின் பிறந்த நாள் விரைவில் வருகிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் வீட்டு பூஜை அறையில்...