Saturday, June 27, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை காவல் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்ததை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தைச் சேரந்த் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் இடம்பெற்று வருகிறது. சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை காவல் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்தது அதிர்ச்சி அளித்தது. இந்த வழக்கில்...
இலங்கைக்கு சட்டவிரோதமாக மஞ்சள் கொண்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கம் பிரிவு தெரிவித்துள்ளது. பெரிய வெங்காயக் கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மஞ்சள் இறக்குமதி செய்வது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. இறக்குமதியாளர்கள் வெங்காயக் கொள்கலன்களின் நடுவில் மஞ்சளை ஒளித்து வைத்து இறக்குமதி செய்வதாக சுங்க பிரிவின் பிரதி ஊடகப் பேச்சாளர் லால் வீரகோன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியை நிறுத்தியதன் காரணமாக இறக்குமதியாளர்கள் இவ்வாறு திட்டமிட்டு இரகசியமான முறையில் இறக்குமதி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொள்கலன்களில்...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தனது மாமனாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட்தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மருத்துவ பாதுகாப்புடன் அரங்கேறும் இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகளின்...
தமிழகத்தில் 7 வயது சிறுமி முட்புதர் நிறைந்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் காவல் எல்லையில் உள்ள அம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் நாகூரான் (தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர்). இவர்களது 7 வயது மகள் நேற்று செவ்வாய் கிழமை முதல் காணவில்லை என்று ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பதிவு செய்த பொலிசார்...
அமெரிக்காவை சேர்ந்து இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து மூன்று நாட்கள் இடைவெளியில் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். கலிபோர்னியாவை சேந்த கரீனா ரின்கன் மற்றும் கெல்லில் மிசா ஆகிய இரண்டு அழகிய இளம் பெண்களும் பள்ளிப்பருவத்தில் இருந்தே தோழிகளாக இருந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து வெவ்வேறு திசைக்கு சென்றனர். இதையடுத்து 2013ல் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். இதன் பின்னர் தான் கரீனா - கெல்லில்...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுரையில் உலகம் முழுவதும் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. இன்னமும் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா உட்பட உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் தினமும் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். எனினும் இலங்கை கொரோனாவை கட்டுப்படுத்தி பொது மக்களின் வாழக்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. கொரோனா நோயை இலங்கை கட்டுப்படுத்திய முறை தொடர்பில் உலகம் முழுவதும்...
இந்தியாவில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் புதுமாப்பிள்ளை கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பீஹார் தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் 15-ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை...
பிரபல தமிழ் சீரியலான வாணி ராணியில் நடித்திருந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. விளையாட்டு, சினிமா என அனைத்து துறையும் முற்றிலுமாக முடங்கியிருந்தது, எனினும் மிக குறைவான நபர்களை கொண்டு படப்பிடிப்புகளை நடத்த பல்வேறு மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீரியல் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த முன்னணி தெலுங்கு சீரியல் நடிகை நவ்யா சாமி...
இந்திய மாநிலம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின்போது 3 வயது சிறுவனை எல்லை பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சொபோர் பகுதியில் இன்று விடிகாலையில் பயங்கரவாதிகளுடன் எல்லை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரர் ஒருவர் வீர மரணமடைந்ததுடன் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கொல்லப்பட்ட முதியவரின் சடலம் அருகே 3 வயதேயான சிறுவனின் அழுகை எல்லை பாதுகாப்புப்...
தமிழகத்தில் நண்பனின் மனைவியை 9 ஆண்டுகளாக துன்புறுத்தி வந்த நபரை பொலிசார் கைது செய்தனர். திருச்சி, கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்தவர் 41 வயதான தினேஷ் என்ற முகமது அஸ்லாம். இவருக்கும் முகமது பாரூக் என்பவருக்கும் கல்லூரி காலத்திலிருந்தே நட்பு இருந்து வந்தது. கடந்த 2005ம் ஆண்டு தினேஷ் முஸ்லிம் பெண் ஒருவரை காதலித்ததால் மதம் மாறினார், தன்னுடைய பெயரை முகமது அஸ்லாம் என மாற்றியும் கொண்டார். இருவருக்கும் திருமணமும் நடந்து...