Wednesday, March 11, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கர்நாடக மாநிலம் கதக் தாலுகா நரேகல் பகுதியை சேர்ந்தவர் அப்பண்ணா (வயது 28). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் லலிதா (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இருவரும் கல்லூரி படிக்குபோதே காதலித்து வந்துள்ளனர். ஆனால் தங்கள் காதலை இருவரும் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளனர். அதாவது தங்களின் காதல் பற்றி வீட்டில் பேசுவதற்கு பயத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையே லலிதாவுக்கு, அவரது பெற்றோர் வேறொரு நபரை பார்த்து திருமணம் செய்து...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலை கொங்கு நகரில் வசித்து வருபவர் 54 வயது மனோகரன் . இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா. இவருக்கு 24 வயது மகன் ராகுல் இருந்தார். ஓமனில் பணிபுரிந்து வந்த இவர் ஏப்ரல் 11ம் தேதி நாமக்கல் வந்துள்ளார். இவரது பழைய வீட்டை புதுப்பிக்கும் யோசனையில் இருந்தார். அத்துடன் மகனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கும், அனிதாவுக்கும் இடையே...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வென்கவெர் நகரில் வசித்து வந்தவர் சிரங் அனடில். இவருக்கு வயது 24. அரியானா மாநிலத்தில் வசித்து வந்த இவர், கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ கல்வி பயின்று வந்தார். நேற்று முன்தினம் வென்கவெர் நகரின் கிழக்கு 55வது அவன்யூ பகுதியில் தனது சொகுசு காரில் சிரங் அன்டில் பயணித்தார். அப்பகுதியில் முக்கிய தெருவில் இரவு 11 மணியளவில் சிரங் அன்டில் காரில் சென்று கொண்டிருந்தபோது...
பிரபல தொழிலதிபரும் பல வெற்றிப் படங்களின் தயாரிப்பாளருமான சௌந்தர்ய ஜெகதீஷ் பெங்களூருவில் தனது வீட்டில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்த போலீசார், செளந்தர்ய ஜெகதீஷ் உடலைக் கைப்பற்றி, தற்கொலை வழக்காக பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரித்து வருகின்றனர். 'அப்பு & பப்பு', 'மஸ்த் மஜா மாடி', 'சிநேகிதரு' மற்றும் 'ராம்லீலா' உள்ளிட்டப் பல படங்களை கன்னடத்தில் தயாரித்தவர் செளந்தர்ய ஜெகதீஷ்(55)....
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் ஏப்ரல் 12ம் தேதி 6 வயது சிறுவன் தவறி விழுந்தான். இவன் 40 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 40 மணி நேர போராட்டத்துக்கு பின் நேற்று காலை 8 மணிக்கு சிறுவன் இருக்கும் இடத்தை மீட்பு கருவிகள்...
பட்டாம்பி அருகே வல்லப்புழாவைச் சேர்ந்தவர் பிரதீப் (40). இவர், வடகராவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பீனா (35). இவர்களுக்கு நிகா (12), நிவேதா (6) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று காலை பீனா கணவருடன் போனில் பேசியுள்ளார். அப்போது, கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டின் மேல் மாடியில் உள்ள படுக்கை அறையில் பீனா மற்றும் 2 குழந்தைகள் மூவரும் மண்ணெண்ணெய்யை...
குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என, டெல்லி உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்திருக்கிறது. மேலும், இரு சகோதரிகளுக்கும் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது. டெல்லியில் சமர் - ஜவேரியா என்ற சகோதரிகள் இருவருக்கும் பக்கத்து வீட்டாரால் திருமண வரன் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வரனைச் சமர் நிராகரித்தார். இதனால் மணமகன் வீட்டார் ஆத்திரமடைந்தனர். இந்த நிலையில், சகோதரிகள் இருவரும் அழகு நிலையத்திலிருந்து ரிக்ஷாவில் வீடு திரும்பிக்...
இந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரைமா சென். பெங்காலி திரையுலகில் மகாநாயகி என போற்றப்பட்ட சுசித்ரா சென்னின் பேத்தி ஆவார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். காட்மதர் சபனா ஆசுமி, சோக்கர் பாலி ஆகிய திரைப்படங்கள் நடிகை ரைமா சென்னிற்கு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது ஹிந்தியில் மாகாளி என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். 1946-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி...
இனி சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும், பல கட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது என்றும் கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள். கடந்த மாதம் நடிகர் ரஜினி இது குறித்து பேசியதாகவும், தனுஷ் சம்மதித்த நிலையில், தான் இப்போது சந்தோஷமாக இருப்பதாகவும், மீண்டும் தனுஷுடன் சேர்ந்து துன்ப வாழ்க்கை வாழ விருப்பமில்லை என்று ஐஸ்வர்யா கூறியதாகவும் தகவல் கசிகிறது. இந்நிலையில், இந்த செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தற்போது விவாகரத்துக்...
மதியம் உணவு இடைவேளையின் போது, தன்னுடைய மதிய உணவை சாப்பிட்டு விட்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி ஸ்ரீலட்சுமி, திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், முறிக்காசேரி பகுதி, தோப்பிரம்குடியில் இன்று மதியம் சாப்பிட்டு விட்டு, தான் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த 14 வயது பள்ளி மாணவி திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பள்ளி நகரைச் சேர்ந்த...