Friday, July 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
நடிகை சயீஷாவின் குடும்பத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான திலீப் குமாரின் தம்பிகள் இஹ்சான் கான் மற்றும் அஸ்லாம் கானுக்கு கடந்த 16ம் தேதி மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மும்பை லீலாவதி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இஹ்சான் கானுக்கு 90 வயதும், அஸ்லம் கானுக்கு 88 வயதும் ஆவதால்...
லண்டனில் வசிக்கும் 18 வயது மாணவி தனது கல்வி செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த நிலையில் அந்த பணத்தை அமெரிக்க பாடகி செலுத்தியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Vitoria Mario என்ற 18 வயது மாணவி போர்சுகலில் இருந்து லண்டனுக்கு கடந்த 2016ல் குடிபெயர்ந்தார். படிப்பில் சிறந்து விளங்கிய Vitoriaவுக்கு தற்போது University of Warwickல் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கல்வி கட்டணத்தை அவரால் செலுத்த இயலவில்லை, மேலும் தங்குமிடம்,...
சஞ்சய் தத்...... பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோய் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் சஞ்சய் தத்திற்கு கடந்த வாரம் நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு புற்றுநோய் மூன்றாவது கட்ட நிலையில் உள்ளதால், அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் நேற்று இரவு சிகிச்சைக்காக மும்பை தனியார்...
பிரித்தானியாவில் வழி கேட்பது போல் வந்து 60 வயது மதிக்கத்தக்க நபரை தாக்கி அவரிடம் இருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்சை கொள்ளையடித்த சென்ற நபர்களின் சிசிடிவி காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Chancery Land இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே வந்த இரண்டு பேர் Tottenham Court சாலைக்கு எப்படி செல்வது என்று...
இஸ்ரேலில் 16 வயது சிறுமி 30 ஆண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் கரையோர ரிசார்ட்டான Eilat-ல் கடந்த வெள்ளிக் கிழமை 16 வயது சிறுமி 30 ஆண்களால் வன்கொடுமை செய்யப்பட்டார். ஹோட்டல் அறையில் குடி போதையில் குறித்த இளைஞர்கள் சிறுமியை பலமுறை வன் கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு பேரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது...
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முகம் சுழிக்க வைக்கும் விஷயத்தை அழகாக மாற்றக்கூடியவர்கள் ஜப்பான்காரர்கள். அவர்களுடைய அணுகுமுறையும் பார்வையும் வித்தியாசமானதாக இருக்கும். அந்த வகையில், பொது கழிப்பறைகள் குறித்த மக்களின் கருத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, புதுமையான கழிப்பறைகளை அறிமுகம் செய்துள்ளனர். டோக்கியோவின் வணிகப் பகுதியான ஷிபூயாவில் உள்ள இரண்டு பூங்காக்களில் கண்ணாடி சுவர்களால் ஆன, அழகான விளக்கு போல ஒளிரும் வெளிப்படையான பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில், வெளியில் இருந்து...
தொண்டையில் வாழைப்பழம் சிக்கி சட்டக்கல்லூரி மாணவி இறந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை அருகே இருக்கும் சோலையாறு எஸ்டேட் பஜார் பகுதியை சேர்ந்தவர் திரு.செல்வரத்தினம். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் கடைசி பெண்ணான தாரணி(19) திருச்சியில் சட்டக்கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் தாரணியின் தந்தை தான் தினமும்...
தனது மகனை 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு தந்தை ஒருவர் 106கி.மீற்றர் சைக்கிளில் அழைத்து வந்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் தார் மாவட்டம் மனவார் தேசில் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சோபாராம். இவர் தனது மகன் அசீஸ் கணிதம் மற்றும் சமூ அறிவியல் தேர்வு எழுதுவதற்கு சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். துணைத் தேர்வு எழுதாமல் மகனின் வாழ்க்கை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சைக்கிளில் அவ்வளவு தூரம் கூட்டிச்...
லிபியா கடல் எல்லையில் கப்பல் ஒன்று திடீரென்று மூழ்கியதால், அதில் இருந்த ஐந்து குழந்தைகள் உட்பட குடியேறுகள் மற்றும் அகதிகள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா அகதிகளின் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது இருக்கும் கொரோனா சூழ்நிலையை பயன்படுத்தி, அகதிகள் மற்றும் குடியேறிகள் சட்டவிரோதமாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குள் நுழைவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லிபிய கடல் எல்லையில் கப்பல் ஒன்று மூழ்கியதில் அதில் இருந்த ஐந்து குழந்தைகள் உள்பட 45 குடியேறிகள் மற்றும் அகதிகள்...
மியூசிக்கலி.... கொரோனா வைரஸின் பிடி இன்னும் கொஞ்சமும் தளரவில்லை என்பது மக்களுக்கு பெரும் கவலையாக இருந்து வருகிறது. இது ஒரு தொற்று நோய் என்பதால் மக்கள் ஒருவருக்கொருவர் நெறுங்கிப் பழகவே பயந்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் பலரும் சமூகவலைத்தளத்தின் மீது தன் கவனத்தினை திருப்பியுள்ளனர். தமிழ் பெண்கள் செய்த மியூசிக்கலி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. பார்த்து ரசியுங்கள்.   View this post on Instagram   Welcome ?you to @tiktok_trendings Admin...