Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கொரோனா தாண்டவமாடி வரும் பொலிவியாவில், கடந்த 5 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் வீடுகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இதுவரை 62 ஆயிரத்து 357 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 2,273 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அங்கு குறைவான அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில், கடந்த 5...
குரங்கு ஒன்று ஒரு புன்னகையால் ஒட்டு மொத்த இணையவாசிகளின் கனத்தினையும் ஈர்த்து வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 12 நிமிடம் அடங்கிய இந்த வீடியோவில் குரங்கு ஒன்று மரக்கிளையில் அமர்ந்து சிரிக்கிறது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், சிரிப்பு ஒரு மிகச் சிறந்த மருந்து. ஆனால் எவ்வித காரணமும் இல்லாமல் நீங்கள் சிரித்தால் உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் என...
இந்தியாவில் மனைவி பெண் குழந்தை பெற்றெடுத்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் மனைவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அகர்டலாவை சேர்ந்தவர் பிரன் கோபிந்தா. இவர் மனைவி சுப்ரியா தாஸ். கர்ப்பமாக இருந்த சுப்ரியா சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த கோபிந்தா மற்றும் அவரின் குடும்பத்தார் இதனால் அதிருப்தி அடைந்தனர். இதனால் மனைவியிடம் தொடர்ந்து கோபிந்தா சண்டை போட்டு வந்தார். மேலும் பெண் குழந்தை பிறந்துவிட்டதே...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தமிழர்கள் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை...
கந்தசஷ்டி கவசம் தொடர்பாக சர்ச்சையான கருத்துகளை பதிவிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. குறித்த யூ-டியூப் சேனல் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னைக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் நிர்வாகிகளில் ஒருவரான வேளச்சேரியைச் சோ்ந்த செந்தில்வாசன் என்பவரை கடந்த 15-ஆம் திகதி கைது செய்தனா், அந்த வீடியோவில் பேசிய சுரேந்திரன் புதுச்சேரியில் 16-ஆம் திகதி...
அமெரிக்காவில் சிறைத் தண்டனையில் இருந்து தப்பிக்க இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் தயார் செய்தும் எழுத்துப் பிழையால் குற்றவாளி சிக்கியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த 25 வயது ராபர்ட் பெர்கர் என்ற இளைஞர், லொறி திருட்டு உள்ளிட்ட சில வழக்குகளில் சிக்கியுள்ளார். தற்போது 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த நிலையில் லொறி திருட்டு தொடர்பாக மீண்டும் வழக்கு வந்துள்ளது. தனக்கு மீண்டும் சிறைத்தண்டனை கிடைக்கப்போகிறது என்பதை உணர்ந்த இளைஞர், தான் இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ்...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியயிட பயணத்தில் கவனம் தேவை. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த...
ஜார்க்கண்ட் மாநிலம் டன்பெட் மாவட்டம் கட்ரஸ் பகுதியை சேர்ந்தவர் ராணி(88). இவருக்கு 6 மகன்கள் உள்ளனர். இதில் 5 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்தனர். இதையடுத்து, மாத தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற, தன்னுடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராணி மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார். ஊருக்கு திரும்பிய ஓரிரு நாள்களில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு...
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை பட்டியலில் சயீஷாவிற்கென தனி இடமுண்டு. கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்களில் சயீஷாவும் ஒருவர். லாக்டவுனுக்கு துவங்கிய நாளிலிருந்தே சயீஷாவின் நடனம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. கேக் செய்வது, உடற்பயிற்சி போன்ற வீடியோக்களை வெளியிட்ட அவர், தற்போது நடுக்கடலில் கப்பலில் ஆடிய நடனத்தை வெளியிட்டார். சார்லி சாப்ளின் படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். Idly meets Ibiza?! ? This...
செய்தி வாசிப்பின்போது பல் கழன்ற நிலையில் எந்தவொரு சலனமும் இல்லாமல் செயல்பட்ட செய்தி வாசிப்பாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உக்ரைனில் உள்ள தொலைக்காட்சியில் 20 ஆண்டுகளாக செய்தி வாசித்து வருபவர் மரிச்கா பதல்கோ. அண்மையில் செய்தி வாசித்தபோது, வாயின் முன்பகுதியிலிருந்த ஒட்டுப்பல் கழன்றுள்ளது. அப்போது எந்தவொரு சலனும் இல்லாமல், கழன்ற பல்லை கையில் பிடித்து நகர்த்திவிட்டு, தொடர்ந்து செய்தி வாசித்தார். இது இணையதளத்தில் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மகளுடன்...